என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு திறனறித் தேர்வு விழிப்புணர்வு
- மாணவர்களுக்கு திறனறித் தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் திறனறித் தேர்வு எதிர்கொள்வது தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறினார்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிவு தேர்வினை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா ஜாய் தலைமை தாங்கினார். இதில் கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா கலந்து கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் திறனறித் தேர்வு எதிர்கொள்வது தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கணேஷ் பூபதி, அன்பழகன், பிரம்ன், நிர்மல் ராஜ், ராஜேந்திரன், அபிஷா, செல்வராணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story