என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அங்கன்வாடி மையங்களை மூடுவதை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பல ஆண்டுகளாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளின் ஊட்டச்சத்து, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் நலன் கருதி அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டும். தேர்தல் பணிகளான வாக்குச்சாவடி பணிகளை பார்க்கச் சொல்லி அங்கன்வாடி ஊழியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அங்கன்வாடி மையங்களில் கேமரா பொருத்துவதை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலைகளில் ஈடுபடுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சவரியம்மாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×