என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • பணி மாறுதல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
    • குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகம் முன்பு நடைபெற்றது

    ஆலங்குடி,

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பி ல் திருவரங்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆலங்குடி பெரியார் தெருவில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க வட்டாரத் தலைவர் விஷாலாட்சுமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமேகலை புஷ்பவள்ளி ஜோதி ஸ்டெல்லாமேரி ரேகாநான்சி சேசுராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட செ யலாளர் செல்வி, மாநிலபொருளாளர்கள் தேவமணி, அன்னபூரணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலியாக உள்ள பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும். மாறுதல் கேட்டுள்ள ஊழியர்கள் உதவியாளர் உள்ளூர் பணி மாறுதல் உடனடியாக வழங்கிட வேண்டும். அரசு வழங்கிய செல்போன் காலாவதி ஆனதால் புதிய செல்போன் உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங் கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர்.




    Next Story
    ×