என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
    • புதிய செல்போன் வழங்கிடவும் கோரிக்கை

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற மாலை நேர ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் கோகிலவாணி தொடக்க உரையாற்றினார். மணிமேகலை, செல்லம், வித்யா, கவிதா, ரசிதா, சசிகலா, வனிதா மலர், கஸ்தூரி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல வருடங்களாக காலியாக உள்ள காலி பணியிடத்தை நிரப்பவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அங்கன்வாடி பணியாளர்களின் பணி சுமையை குறைக்கவும், பணி மாறுதல் கோரிக்கையை நிறைவேற்றவும் அரசு வழங்கிய கைபேசி காலாவதி ஆனதால் புதிய கைபேசியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் வட்டார துணைச் செயலாளர் தேவி கோரிக்கை விளக்க உரையாற்றினார். சி ஐ டி யு ஒருங்கிணைப்பாளர் டேவிட் நிறைவு உரையாற்றினார். வட்டாரப் பொருளாளர் வனஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×