என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
- சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் சட்ட விரோதமாக மது விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித பாண்டேக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசா ர் ஆண்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கும்மங்குளத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜஸ்டின்திரவியம் (வயது 35) என்பவர், அரசு மதுபானகடை அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில் பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி சப் இன்ஸ் பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் .
Next Story






