என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- கந்தர்வகோட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது
- தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டையில் ஒன்றிய நகர அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குமார், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திக் மழவராயர், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட பிரதிநிதி கவிதா சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமார், பெருமாள்இளங்கோவன், பன்னீர், நகரச் செயலாளர் செந்தில்குமார், பாசறை அருண் பிரசாத், ஜெ.பேரவை சக்திவேல், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செல்லத்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.






