என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபர் கைது
    X

    லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபர் கைது

    • லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • பஸ் ஸ்டாப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்ப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேகலா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றதாக கல்லாலங்குடி கலைஞரை நகரைச்சேர்ந்த தேசிகன் மகன் லோகேஸ்வரனை (வயது 25) கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.




    Next Story
    ×