search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் கபடி தேசிய சிறப்பு மையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
    X

    மயிலாடுதுறையில் கபடி தேசிய சிறப்பு மையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

    • மயிலாடுதுறையில் கபடி தேசிய சிறப்பு மையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்
    • கபடி தேசிய சிறப்பு மையத்தை அமைத்து தருமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர்விடம் பிரிவு பாஜக மாநில விளையாட்டு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

    கந்தர்வகோட்டை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சார்பாக தமிழகத்தில் மயிலாடுதுறையில் தமிழர்களின் வீர விளையாட்டான கபடி தேசிய சிறப்பு மையத்தை அமைத்து தருமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் விடம் தமிழ்நாடு விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, விளையாட்டு பிரிவு மாநில பார்வையாளர் சுமதி வெங்கடேசன், விளையாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன். மாநில செயலாளர் கார்த்திக் மற்றும் அமைச்சர் கபடி கழக உறுப்பினர்களுடனும் பாஜக மாநில விளையாட்டு பிரிவு நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடு துறையில் கபடி தேசிய சிறப்பு மையத்தை மத்திய அரசு அமைத்து தரும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உறுதியளித்தார்.இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டுமே கபடி தேசிய சிறப்பு மையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×