search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகன் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்
    X

    விராலிமலையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகன் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

    • விராலிமலையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகன் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்
    • சாதனை மாணவருக்கு பாராட்டுகள் குவிகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் அறிவுநிதி (வயது 17). இவர் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் தங்கமணி ஆகிய இருவரும் கூலி தொழிலாளிகள் ஆவார்கள். மிகவும் ஏழ்மை நிலையிலும் நன்கு படித்து நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்று முடிவெடுத்து நீட் தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்ததன் பயனாக நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதுகுறித்து அறிவுநிதி கூறியதாவது:- எனது பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தனர். சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து வந்த நிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்து விட்டேன்.

    பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் நீட் தேர்வுக்கு படித்தேன். இருப்பினும் இன்னும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது என உணர்ந்த நான் சமூக வலைதளத்தில் தேடும்போது உயிரியல் பாடத்திற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்தினால் இது போன்ற வெற்றிகளும் கிடைக்கும் என்பதை தற்போது உணர்கிறேன்.

    இனிவரும் காலங்களில் நீட் தேர்வுக்கு என அரசாங்கமே இதுபோன்ற செயலியை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனக்கு தற்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×