என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
    X

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

    • சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாருக்கு வந்த தகவலின்படி நடவடிக்கை

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகேயுள்ள கைக்குறிச்சி குளத்துப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அங்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது38), சத்யம் (43), பிரபாகரன் (27), ராமச்சந்திரன் (40), அப்துல் கரீம் (40), வீரபாண்டியன் (50) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 4 செல்போன்கள், 2 டூவீலர்கள் மற்றும் 4 ஆயிரத்து 330 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×