என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்க சங்கிலி பறித்து சென்ற 4 வாலிபர்கள் கைது
- தங்க சங்கிலி பறித்து சென்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேரி. இவர் கடந்த மாதம் வகுப்பு முடித்து தனது ஸ்கூட்டரி ல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கரம்பக்காடு இனாம் கிராமத்தில் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கீரமங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவ ட்டம் பட்டுக்கோட்டை அந்தோணியார் தெரு பாண்டியன் மகன் சுதாகர் (வயது 20), தாமரங்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரீஸ் (24), நாவலர் நம்பி மகன் விஜயரகுநாத் ( எ )இந்திரஜித் (25), காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கட்ட வாக்கம் சமத்துவ புரத் ரத்தைசேர்ந்த சுரேஷ்குமார் மகன் மோகன்ராஜ் (21) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, சென்னையில் விற்கப்பட்ட நகையையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.






