என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேர் கைது
- புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்
- இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் துறைமுகங்களிலிருந்து நேற்று காலை 302 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி துரைராஜ், வளர்செல்வம், ஜெலிலா, மகேந்திரன், சிவபிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற தியாகு (வயது48), பாண்டி(46),காடியப்பன் (26) பாண்டி (26), மாதவன் (21), வீரமணி (44), அறிவழகன் (35), தாமரைச்செல்வன் (38), முத்துப்பாண்டி(45), கலைச்செல்வன் (35), காளிதாஸ் (32), அஜய் (29), நவீன் (30), விஜி (25), மகேந்திரன் (40), மாயகிருஷ்ணன் (65), முருகன் (40), பாண்டி(38), குமரவேல் (26), அய்யனார் (41), ஜெயந்தன் (43), பிரதீப் (46), சுப்பிரமணி(39), குப்புராஜ் (55) ஆகிய 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடலுக்குச் சென்ற சக மீனவர்கள் தெரிவிக்கையில் நேற்று மாலை 4 மணி அளவில் சர்வதேச எல்லை பகுதி அருகே இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படையினர் எங்களில் சக மீனவர்களை கைது செய்தது. இது மிகவும் கண்டனத்திற்குறியது. நம் நாட்டு எல்லை பகுதியில் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தும் போக்கை கடைபிடித்து வருகிறது. அவர்களுக்கு மீனவர்கள் முக்கியமில்லை, அவர்களுக்கு எங்கள் படகின் மீதே நாட்டம், எனவே மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்