என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது
- ஆலங்குடி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் தஞ்சையில் போலீசாரிடம் சிக்கினர்
- மோப்பநாய் உதவியுடன் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்
புதுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 73) ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் தனது குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். நடுவிக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு அவ்வப்போது மகேஸ்வரன் சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் சந்திரனின் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்திரனுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து ெசன்ற அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.30, ஆயிரம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சந்திரன் வாட்டாத்தி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தஞ்சையிலிருந்து சோழர் என்ற மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற த டயங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டை நோட்டமிட்ட மோப்பநாய் அங்கிருந்து சில அடி தூரத்தில் உள்ள அய்யப்பன் என்பவரது வீட்டின் முன்பு போய் நின்றது.
இதையடுத்து அய்யப்பன் (29), அவரது கூட்டாளி சிவராஜா(22) ஆகியோரை ஒரத்தநாடு டி.எஸ்.பி. பிரசன்னா உத்தரவின் பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் ஆகியோர் கைது செயது விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த வீட்டில் பதிவான விரல்ரேகை பிடிப்பட்ட 2 பேரிடம் ஒத்துப்போனது தெரியவந்தது. கைதான இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கைவரிசை காட்டியது தொடர்பான வழக்குகள் அப்பகுதி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.






