என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
- காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி-அரிமளம் விளக்கு சாலையில் மாவட்ட தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து ேசாதனை நடத்தினர். சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது அறந்தாங்கி அருகே உள்ள எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த சேக் தாவுது மகன் சதாம் உசேன் (வயது 28), கல்லாலங்குடி பாரதி நகரை சேர்ந்த சம்சுதீன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 120 கிலோ புகையிலை பொருட்கள், கார், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Next Story






