என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    • மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 10-ம் வகுப்பு படித்து வந்தார்

    புதுக்கோட்டை

    கறம்பக்குடி அருகே உள்ள மேல மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், டைலர். இவரது மகள் பவானி (வயது 14). இவர் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவானி தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்."

    Next Story
    ×