என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    அறந்தாங்கியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • அறந்தாங்கியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை;

    அறந்தாங்கி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதன்பேரில் அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான சித்தாலங்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சக்திவேல் அறந்தாங்கி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×