என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் போராட்டம்
- மணல் ஏற்ற வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தினர்
- வெள்ளாற்றுப் பகுதியில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது
அறந்தாங்கி:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பரமந்தூர் வெள்ளாற்றுப் பகுதியில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் நேரடியாக மணல்குவாரிக்கு சென்று மணல் அள்ளுவதற்கு பதிலாக, தனியார் அள்ளி வைக்கும் மணலை எடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தனியார் அள்ளி வைக்கும் மணலில் தரம் இல்லை, இதனை மக்களிடம் விற்க முடியாது, அதற்கு பதிலாக தாங்களே நேரடியாக மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வழியாக மணல் ஏற்ற வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்த்துறையினர் ஆகியோர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி திருச்சியில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளோடு இரு தரப்பினரையும் வைத்து முடிவு எடுக்கலாம் என கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.






