search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் இறங்க வேண்டாம்
    X

    குளத்தில் அருகில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் இறங்க வேண்டாம்

    • குளத்தில் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியது.
    • அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காட்டில் சுமார் 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது.

    இந்த குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக தகவல் பரவியது.

    இதையொட்டி கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் புதுக்குளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த குளத்தில் திருட்டுத்தனமாக ஒரு சிலர் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியதாகவும், அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

    இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர், இந்த குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் குளத்தில் இறங்க வேண்டாம் என குளத்தின் அருகே எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    தொடர்ந்து, இந்த குளத்தை கண்கா ணித்து வருவதாகவும் வனத்துறை அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

    Next Story
    ×