search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே சாலைபணி நிறுத்தியதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
    X

    பண்ருட்டி அருகே சாலைபணி நிறுத்தியதை கண்டித்து பொதுமக்கள் மறியல்

    • பண்ருட்டி அருகே சாலைபணி நிறுத்தியதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • சுமார் அறை மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறு வத்தூர் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதி மூலம் த.வா.க.கவுன்சிலர் விஜய தேவி தேவராஸ் எஸ்.ஏரிப்பாளையம் புதுநகர் பகுதியில் 7.5 லட்சம் மதிப்பில் தார் சாலை போடும் பணி தொடங்கி அந்த பணி தற்போது நடை பெற்று வருகிறது. அப்போது அங்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் முருகன் என்னிடம் எந்த தகவலும் கூறாமல் சாலை போடுவதால் பணியை நிறுத்த வேண்டும் என்றார். இதனால் த.வா.க.கவுன்சிலர் விஜயதேவிதேவராசு ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் எஸ்.ஏரிப்பாளையம் மெயின்ரோட்டில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அைற மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    Next Story
    ×