என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்
- மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
- நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இதன்தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இதற்கான விழா பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் உள்ள காந்திமதி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 110 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ, மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் டைட்டஸ், அமலா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், பள்ளி தலைமை ஆசிரியை வத்சலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் 7,662 மாணவர்கள், 9,321 மாணவிகள் என மொத்தம் 16,983 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்