search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
    X

    பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க. இளைஞரணி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்.

    மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

    • தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.
    • நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வட மழை மணக்காட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோபா மலர்வண்ணன். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், துணை அமைப்பாளர் ஜோதி செல்லபாண்டியன், ரெத்தினசாமி, கவியரசன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், ஒன்றிய துணைச் செயலாளர் சேது ராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகனாதச மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காந்திமதி லோகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வம் செந்தில், சார்பு அணி அமைப்பாளர் கலைக்கோவன், கவி இளவரசன் ஒன்றிய கிளைக் செயலாளர்கள் தசமணி, சாம்பசிவம், ஒன்றிய பிரதிநிதி காமராஜ், வேதரத்னம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×