என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
சாணார்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
குள்ளனம்பட்டி:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சாணார்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார்.
இதில் மத்திய அரசு வழங்கக்கூடிய 100 நாள் வேலையை நம்பி மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 10 முதல் 15 வாரங்களாக ஊதியம் தராததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் ஒன்றிய தலைவர் முருகன், பொருளாளர் பழனியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதியிடம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
Next Story






