search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடகை வீட்டில் விபசாரம்  பெண் புரோக்கர் கைது
    X

    வாடகை வீட்டில் விபசாரம் பெண் புரோக்கர் கைது

    • 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள தில்லை நகரில் வாடகை வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து வடவள்ளி போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் லதா (வயது 53) என்பவரை கைது செய்தனர். வீட்டில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பெண் புரோக்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×