என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் பொங்கல் திருவிழா- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
- விழாவில் பலூன் உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
- போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ரஜினி ரசிகர் மன்றமும், பெரியசாமி நகர் பொதுமக்களும் இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு தைத்திருநாள்விழா நடைபெற்றது. வக்கீல் மாரீஸ்வரன், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட இணை செயலாளர் தவமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.
ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்கொடி, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா, பா.ஜனதா வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் பழனிமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பெண்க ளுக்கான கோலப்போட்டி, பெரியவர் சிறியவர் மியூசிக்கல் சேர், பெரியவர் சிறியவர் பலூன் உடைத்தல், சிறுவர்க ளுக்கான ஓட்டப்பந்தயம், சிறுவ ருக்கான ஸ்லோ சைக்கிள் ரேஸ், சிறுவருக்கான சாக்கு போட்டி, தண்ணீர் நிரப்புதல். சிறுவர், சிறுமிகளுக்கான நடனப்போட்டி, பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் சிறுவர், சிறுமிகளுக்கான பரிசுப் பொருட்களை கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை முன்னாள் வியாபாரிகள் சங்கத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துராஜன், ரஜினி ரசிகர் மன்றமாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, நாதன், விஜய் ஆனந்த், வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், ஐக்கிய அரபு அமீரக பொருளாளர் பொன்முருகன்லட்சுமண ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.
தொழிலதிபர் அண்ணாதுரை, ஆசிரியர் வரப்பிரசாதம் கண்ணன், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், ஜோதி காமாட்சி, சையத் அலி, காளி ராஜன், சந்தன மாரியப்பன், முருகன், சதீஷ், ராஜீவ் காந்தி, மலர் மாடசாமி, கணேசன், சேக் முகமது உள்ளிட்ட ஏராளமான ரஜினி ரசிகர்கள் பெரியசாமி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்