search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யோகாசன போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
    X

    வெற்றி பெற்ற மாணவிக்கு தருமபுர ஆதீனம் பரிசு வழங்கினார்.

    யோகாசன போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

    • முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.
    • பரதநாட்டியம், கர்நாடக இசைகச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பள்ளியில் நடைபெற்ற விழாவில் திருச்சி மண்டல அளவிலான யோகாசன போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்ப ந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளி நிர்வாக செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.

    தொடர்ந்து பரதநா ட்டியம், கர்நாடக இசை கச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற திருஞானசம்பந்தர் பள்ளி மாணவமாணவிகள் சக்கராசனம்,அர்த்தபா தாசனம், மயூராசனம் உள்ளிட்ட யோகாச னங்களை செய்துகாட்டினர். அவர்களுக்கு தருமபுர ஆதீனம் பரிசு கோப்பை வழங்கி ஆசி கூறினார்.

    Next Story
    ×