search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காடு அருகே தனியார் பஸ் பாலாற்றில் கவிழ்ந்து விபத்து: 4 பெண்கள் உட்பட 9 பேர் படுகாயம்

    • ஆற்காடு அடுத்த பூங்கோடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலாற்றங்கரையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள ஆற்காடு-கலவை சாலையில் வந்தவாசியில் இருந்து 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று ஆற்காடு வழியாக வேலூர் நோக்கி வந்துகொண்டிருந்தது.

    ஆற்காடு அடுத்த பூங்கோடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலாற்றங்கரையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. பஸ் கவிழ்ந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 9 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு தாலுகா போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    Next Story
    ×