search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய முதன்மை கல்வி அலுவலர்
    X

    வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கை குறித்து முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய முதன்மை கல்வி அலுவலர்

    • அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள்.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் புனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, ஆசிரியை பூங்கொடி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்றத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×