search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் கர்ப்பிணி திடீர் சாவு
    X

    செங்கோட்டையில் கர்ப்பிணி திடீர் சாவு

    • காயத்ரிக்கும், அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
    • குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த காயத்ரி திடீரென மயக்கம் அடைந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சுடலை (வயது 52). இவர்களின் மகள் காயத்ரி (26). இவருக்கும், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

    கர்ப்பம்

    காயத்ரி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு அவர் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிப்படைந்து திடீரென இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×