search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மண்டலத்தில்  பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரித்த ஊழியர்களுக்கு பாராட்டு
    X

    பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரித்த பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.

    நெல்லை மண்டலத்தில் பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரித்த ஊழியர்களுக்கு பாராட்டு

    • தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
    • பாராட்டு விழா ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்த நெல்லை மண்டல பிரிவு அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 26 பிரிவு அலுவலகம் மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் 31 பிரிவு அலுவலகத்திலும் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்து பழுது இல்லாமல் பணிகள் மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நெல்லை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மண்டல தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இந்த விழாவில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளர் (நகர்ப்புறம் )முத்துக்குட்டி, செயற்பொறியாளர் (கல்லிடைக்குறிச்சி) சுடலையாடும்பெருமாள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×