search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை, திருவையாறில் நாளை மின்நிறுத்தம்
    X

    தஞ்சை, திருவையாறில் நாளை மின்நிறுத்தம்

    • மருத்துவகல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்சார வாரிய திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக் கிழமை) நடைபெறுகிறது. இதனால் கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதேப்போல் திருவையாறு, மேலத்திருப் பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழத் திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி.

    திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்திய நாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ் தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லிய நல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் சுற்று பகுதிகளில் நாளை வட்டார 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×