search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லம், சாலியமங்கலத்தில் நாளை மின்நிறுத்தம்
    X

    வல்லம், சாலியமங்கலத்தில் நாளை மின்நிறுத்தம்

    • தஞ்சை மின்நகர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்நகர் துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதனால் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக் கோட்டை, கம் பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும் பராமரித்தலும் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் மற்றும் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×