search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மக்கள் தொகை தினவிழா
    X

    மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அரசு பள்ளியில் மக்கள் தொகை தினவிழா

    • மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.
    • மாணவர்கள் அனைவரும் மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை தாங்கினார்.

    இதில் செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் உலக மக்கள் தொகை நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

    இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.

    மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×