என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி
- மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த போலீஸ் காரர் மீது மோதியது.
- இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனல் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பழனிவேல் (வயது 39).
இவர் கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார் அப்போது அந்த வழியாக ராமநாதன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஏட்டு பழனிவேல் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனி வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக தஞ்சை எஸ் பி ஆசிஷ் ராவத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விபத்தில் இறந்த ஏட்டு பழனிவேலுக்கு திருமணமாகி சத்தியா 32 என்ற மனைவியும், சாய் பிரசாத் 9, பத்ரிநாத் 7 என்ற இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்