search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கைதான போலீஸ்காரரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
    X

    கோவையில் கைதான போலீஸ்காரரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    • ஸ்ரீதர் வாட்ஸ்-அப் கால் மூலமே போதைப்பொருள் கும்பலுடன் பேசி இருக்கிறார்.
    • இந்தநிலையில் நேற்று ஸ்ரீதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    கோவை,

    கோவையில் கஞ்சா, போதை மாத்திரரை, மருந்து சப்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர். அந்த கும்பல் பெங்களூருவில் பதுங்கி இருந்தது. இதையடுத்து கோவை போலீசார் பெங்களூர் சென்று சுஜிமோகன் (26) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

    இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்த ஸ்ரீதர் (29) என்பவர் பல்வேறு வகையில் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்தது. சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் பண ஆசையில் போதைப்பொருளை எப்படி கடத்துவது, எந்த பகுதியில் போலீஸ் சோதனை செய்கிறார்கள்? என்பது போன்ற பல்வேறு தகவல்களை அந்த கும்பலுக்கு அவ்வப்போது அளித்துள்ளார்.

    ஸ்ரீதர் ஆலோசனையின் பேரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலும் போலீசாரிடம் சிக்காமல் கோவையில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    ஸ்ரீதர் தான் எந்தவகையிலும் பிரச்சினையில் சிக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் வாட்ஸ்-அப் கால் மூலமே போதைப்பொருள் கும்பலுடன் பேசி இருக்கிறார். ஆனால் ஸ்ரீதர் பேசுவதை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்து வைத்திருந்துள்ளனர்.

    போலீசாரிடம் அந்த கும்பல் சிக்கியதும் அவர்களின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது செல்போனில் போலீஸ்காரர் ஸ்ரீதர், அவர்களுடன் பேசிய ஆடியோக்கள் ஏராளமான இருந்தன. அந்த உரையாடல்களை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று ஸ்ரீதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். துறை ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஸ்ரீதரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் கோவை கோர்ட்டில் நாளை மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×