search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் அருகே போலீஸ் ரோந்து: மோட்டார் சைக்கிளில் கடத்திய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
    X

    மயிலம் அருகே போலீஸ் ரோந்து: மோட்டார் சைக்கிளில் கடத்திய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

    • இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.
    • மது பாட்டில்கள் சாராயம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்திலிருந்து வானூர் மரக்காணம் திண்டிவனம் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாராயம், மது பாட்டில் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று இரவு புதுவையில் இருந்து மயிலம் அருகே ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி அதில் சோதனை செய்தனர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் 20 லிட்டர் அளவுள்ள 4 சாராயப் பாக்கெட்டுகள் மற்றும் 25 லிட்டர் சாராயக்கேன் இருப்பது தெரியவந்தது.

    உடனே போலீசார் சாராய கேன் மற்றும் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வாலிபரிடம் விசாரணை செய்ததில் அவர் புதுவை மாநிலம் சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 37) சாராய வியாபாரி என்பதும் தெரிய வந்தது. இவர் புதுவையில் இருந்து சாராயம், மது பாட்டில்களை பலமுறை கடத்தி வந்தது தெரியவந்தது. புதுவை மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் மது பாட்டில்கள் சாராயம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    Next Story
    ×