search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வாகன ஓட்டிகளை ரோஜாப்பூ கொடுத்து பாராட்டிய போலீசார்
    X

    கோவையில் வாகன ஓட்டிகளை ரோஜாப்பூ கொடுத்து பாராட்டிய போலீசார்

    • போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • போக்குவரத்து போலீசார் லட்சுமி மில்ஸ் சிக்னலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

    கோவை,

    கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது குறித்தும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மாநகர உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் லட்சுமி மில்ஸ் சிக்னலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது நள்ளிரவு 12 மணி வரை லட்சுமி மில்ஸ் சிக்னலில் உள்ள சிக்னல் இயக்கப்பட்டது. அப்போது சிக்னலை மதித்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளை உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் பாராட்டி ரோசாப்பூ வழங்கினர்.

    Next Story
    ×