search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் கதவை உடைத்து நகைகள்-ரூ.1 லட்சம் கொள்ளை
    X

    வீட்டின் கதவை உடைத்து நகைகள்-ரூ.1 லட்சம் கொள்ளை

    • வீட்டை பூட்டி விட்டு, அருகிலுள்ள தனது விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்.
    • ரத்தினம்மாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூர் மேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 56). இவரது கணவர் சுப்பிரமணியன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். ரத்தினம்மாள் தனது மகன் பிரவீன் வீட்டில் மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார்.

    பிரவீன் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். விவசாய வேலை காரணமாக ரத்தினம்மாள் கடந்த 1-ந்தேதியன்று ஏளூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு, அருகிலுள்ள தனது விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை ஏளூரில் உள்ள ரத்தினம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக, வீட்டின் அருகில் இருந்தோர் போனில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த ரத்தினம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோக்களில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம், 3 பவுன் தங்க பட்டை செயின் 2, 1 பவுன் தங்க காசு, 1 பவுன் கம்மல் ஒரு ஜோடி மற்றும் அரை பவுன் தங்க கம்மல் ஒரு ஜோடி என தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    பின்னர் இதுகுறித்து ரத்தினம்மாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் தேடி வருகின்றனர். இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×