search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 228 மையங்களில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது - பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரம்

    • சிறைக் கைதிகள், தனித்தேர்வர்களுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் எடுத்துச்செல்லப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    183 பள்ளிகள்

    மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 183 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 21 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர்.

    இதுதவிர சிறைக் கைதிகள், தனித்தேர்வ ர்களுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்க ப்பட்டு இருந்தது. இந்த மையங்கள் அனைத்தும் நேற்றே தயார்படுத்தி வைக்கப்பட்டது.

    1,150 ஆசிரியர்கள்

    தேர்வையொட்டி மாநகரில் 2 பள்ளிகள், மாவ ட்டத்தில் சேரன்மகாதேவி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய இடங்களில் 3 பள்ளிகளில் வைக்கப்ப ட்டு இருந்த வினாத்தாள் கட்டுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அந்த இடங்களில் இருந்து இன்று காலை 7 மணிக்கு வாகனங்கள் மூலமாக வினாத்தாள்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது. தேர்வு பணிகளில் சுமார் 1,150 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    7 பறக்கும் படை

    தேர்வில் முறைகேடு களை தடுக்கும் வகையில் 7 பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணித்தனர். ஒரு பறக்கும் படைக்கு ஒரு தலைமை அலுவலர், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அலுவலர் இடம்பெற்றிருந்தனர். தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 73 நிலையான படை அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேர்வின் போது சிறப்பு அனுமதி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் பணிக்காக 187 பேர் நியமிக்கப்பட்டனர். சிறப்பான அனுமதி பெற்ற மாணவர்களுக்கான தேர்வு எழுதும் முறையை கண்காணிக்க 4 அறைக்கு ஒரு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டனர்.

    தேர்வினை நெல்லை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஆகியோர் கண்காணித்து வந்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 18,299 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 64 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்வு தொடங்கியது.

    இந்த பணிக்காக 1,322 ஆசிரியர்கள் ஈடுபடு த்தப்பட்டு உள்ளனர். முறைகேடுகளை தவிர்க்க 5 பறக்கும் படை, 150 ஸ்கேனிங் அலுவர்கள் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர். தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த தேர்வை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 204 பள்ளிகளை சேர்ந்த 19,998 பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இன்று தேர்வெழுதினர். மொத்தம் 91 மையங்களில் நடந்த இந்த தேர்வையொட்டி தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வர்கள் தவிர்த்து மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. எலக்ட்ரா னிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடுமையான சோதனைக்கு பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×