search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி
    X

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி.

    நாகையில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

    • குத்தாலம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப் படையின் சார்பாக பள்ளியைச் சுற்றியுள்ள குத்தாலம் மேலத்தெரு நடுத்தெரு கீழத்தெரு மற்றும் கழுங்கடித் தெரு ஆகிய பகுதிகளில் மக்களிடையே பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இலா செல்லம்மாள் பேரணியை துவங்கி வைத்தார்.

    பள்ளியின் தேசிய பசுமைப் படையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் அங்குள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் தேசியப் பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் ஐ.சந்தோஷ் காட்சன் ஐசக் ஆசிரியர் செய்திருந்தார்.

    Next Story
    ×