என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூரில் பேட்டை ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்
- பரமத்திவேலூர் பேட்டையில் ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் உள்ளது.
- இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பேட்டையில் ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இதனையொட்டி, நேற்று காலை கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்து கோவிலில் முன்பு நடப்பட்ட கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர்.
நாளை மறுநாள் பூச்சொரிதல் விழாவும், மே 1-ந் தேதி அக்னி சட்டி எடுத்து வடிசோறு வைத்து பூஜை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மே 2-ந் தேதி நடக்கிறது. 3-ந் தேதி பொங்கல், மாவிளக்கு பூஜையும், 5-ந் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் அம்மன் முத்துப்பல்லக்கில் உலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்