search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனிம வளங்களை அனுமதியின்றி  வெட்டி எடுப்பதாக கலெக்டரிடம் மனு
    X

    கனிம வளங்களை அனுமதியின்றி வெட்டி எடுப்பதாக கலெக்டரிடம் மனு

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் பெரியப்பட்டி கூட்டு பொறுப்பு விவசாயக் குழு செயலாளா்தேவராஜன் ஒரு மனு கொடுத்தார்.
    • அந்த மனுவில் பெரியப்பட்டி கிராமத்தில் 1.76 ஏக்கா் நிலத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் பெரியப்பட்டி கூட்டு பொறுப்பு விவசாயக் குழு செயலாளா்தேவராஜன் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் அருகே பெரியப்பட்டி கிராமத்தில் 1.76 ஏக்கா் நிலத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி முதல் 2022 ஆகஸ்ட் மாதம் வரையில் இங்கு கற்கள் வெட்டி எடுக்க கனிமவளத்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. ஆனால், உரிமத்தில் வழங்கப்பட்ட விதிகளின்படி கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதில்லை. இதனால் பெரியப்பட்டியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்து வருகின்றன.

    முன்னறிவிப்பின்றி கற்கள் வெட்டப்படுவதால் சுமாா் 3 கி.மீ. தூரத்திற்கு கற்கள் வந்து விழுகின்றன. பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. விவசாயமும் சரிவர செய்ய முடியவில்லை. குழந்தைகள் உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட கல்குவாரியை சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டுவதற்கும், உரிம விதிகளை பின்பற்றவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×