search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் தொழிலாளி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது - மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
    X

    ஆறுமுகநேரியில் தொழிலாளி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது - மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

    • சூரிய சேகர் என்பவர் குடிபோதையில் போர்வையுடன் வந்து முருகனின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார்.
    • சாந்து கரண்டியை எடுத்துக்காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பாரதிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 60). பெயிண்டர். இவரது மனைவி கன்னீஸ்வரி, மகன் பாஸ்கர், மகள் பவானி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சூரிய சேகர் (38) என்பவர் குடிபோதையில் போர்வையுடன் வந்து முருகனின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். இதனை கன்னீஸ்வரியும், அவரது மகன் மற்றும் மகளும் சேர்ந்து கண்டித்து தடுத்துள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சூரிய சேகர் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிங்கமுத்து, ஐகோர்ட் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்கள் சாந்து கரண்டியை எடுத்துக்காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

    இதனை கேள்விப்பட்டு முருகன் அங்கு வருவதற்குள் சூரிய சேகர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய சேகரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×