என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளி தற்கொலை
- கட்டிட தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்
- நீண்டநாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் வடக்குதெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோவிந்தராஜ் (வயது41). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனைவி சாந்தி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிள்ளைகளுடன் கோயம்புத்தூரில் உள்ள அவரது அண்ணண் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோவிந்தராஜ், மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவிடத்திற்கு சென்று இறந்த கோவிந்தராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






