search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.42  கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி
    X

    ரூ.4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி

    • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னை, வடக்கலூர், கிழுமத்தூர், மிளகாநத்தம், கீழப்புலியூர், மழவராயநல்லூர் ஆகிய கிராமங்களில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல், சிமெண்ட் சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல் போன்ற ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியண், மேலாண் இயக்குநர் (த.அ.போ.(கும்ப)லிட்,கும்பகோணம் மோகன், பொது மேலாளர் (த.அ.போ.(கும்ப)லிட்)திருச்சி மண்டலம் சக்திவேல், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார்

    உள்ளிட்ட அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நன்னை சின்னு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஒகளூர் அன்பழகன், வசிஷ்டபரம் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பலர்

    Next Story
    ×