search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.7.66 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள்
    X

    ரூ.7.66 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள்

    • ரூ.7.66 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம், கருப்பட்டாங்குறிச்சி, அத்தியூர், லெப்பைக்குடிக்காடு கீழப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம், தலைமையில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், லெப்பைக்குடிக்காடு பகுதியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நிழற்குடை அமைக்கும் பணி மற்று ம் ஜமாலியா நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொட ங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜமாலியா நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கைியனை விரைவில் நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்க எடுக்கப்படும். சிறுபான்மையினர் இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதி மென்மேலும் வளர பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்

    Next Story
    ×