என் மலர்
உள்ளூர் செய்திகள்

வி.ஏ.ஒ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு விஏஒ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 15 பெண்கள் உட்பட 65 பேர் கலந்துகொண்டனர்.
Next Story