என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு
    X

    விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு

    • விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டுபோனது.
    • வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல்(வயது 45). விவசாயி. இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக வி.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×