என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
- மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டைவிட்டு வெளியே சென்றவர்
பெரம்பலூர்:
மேலப்பழுவூர் கீழையர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அன்பரசன்(வயது 15). இவர் கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இதையடுத்து அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குளத்தூரில் உள்ள மாமா வீட்டிற்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அன்பரசன் 3 பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அன்பரசன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.
அப்போது கொளக்காநத்தம் ஓடைக்கரையில் உள்ள புங்க மரத்தில் துணியால் தூக்குப்போட்டு அன்பரசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து அன்பரசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






