என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்
- போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
- 11 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமில் பெறப்பட்ட 11 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி கூறுகையில், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
Next Story