search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பறியும் நிபுணர் வீட்டில்  நகை, பணம் திருட்டு
    X

    துப்பறியும் நிபுணர் வீட்டில் நகை, பணம் திருட்டு

    • துப்பறியும் நிபுணர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது
    • சென்னையில் சிகிச்சையில் இருந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வெங்கடாசலபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 51). இவர் சென்னையில் டிடெக்டிவ் ஏஜென்சி (தனியார் துப்பறியும் நிறுவனம்) நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தாமோதரன் தனது மனைவியை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் கணவன் மனைவி இருவரும் கடந்த இரு தினங்களாக சென்னையிலேயே தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தாமோதரன் வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவினை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாமோதரனின் சகோதரர் கரிகாலன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாயுடன் இன்று காலை சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த மோப்ப நாய் திருட்டு நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    துப்பறியும் நிபுணர் வீட்டில் நோட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×